உள்நாட்டு கஞ்சாவுடன் ஒருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, September 22, 2019

உள்நாட்டு கஞ்சாவுடன் ஒருவர் கைது

கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து பொத்துவில், லாஹுகல பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டு கஞ்சா தொகையுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடம் இருந்து 468 கிராம் உள்நாட்டு கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன்படி, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த கஞ்சா தொகை லாஹூகலவில் இருந்து பொத்துவில் நோக்கி கொண்டு செல்லும் வழியில் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

43 வயதுடைய சந்தேகநபர் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் என மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment