தங்க புத்தர் சிலைகள் இரண்டினை தேடி தம்புள்ளை நீர்த்தேக்க வீதி பிரதேசத்தில் வீடு ஒன்றினுள் நீண்ட காலமாக நிலத்தடி அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 70 மற்றும் 80 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
நீண்ட காலமாக சூட்சமமான முறையில் வீட்டிற்கு முன்னால் கிணறு தோண்டுவது போல் இந்த அகழ்வு நடவடிக்கை இடம்பெற்று வநதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய அதிகாலை வீட்டை சுற்றிவளைத்த போது குறித்த இருவரும் சுமார் 25 அடி ஆழத்தில் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வீட்டு உரிமையாளருக்கு கனவில் வந்த ஒருவர் வீட்டுக்கு அடியில் இரண்டு தங்க புத்தர் சிலைகள் உள்ளதாக தெரிவித்துள்ளதாகவும், அந்த இரண்டு சிலைகளையும் விற்று விகாரை ஒன்றை அமைக்குமாறு அறிவித்ததாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்த அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் பூஜை பொருட்கள் சிலவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். சந்தேநபர்கள் மற்றும் உபகரணங்கள் தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளன.
No comments:
Post a Comment