யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ள வரையில் கஞ்சா விநியோகிக்கும் நபர் தொடர்பில் தேடி பொலிஸார் இன்று காலை முதல் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
சொகுசு மோட்டார் வாகனம் ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ள வரையில் கஞ்சா விநியோகம் செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் தம்புள்ள, கண்டலம் சந்தியில் பொலிஸார் மோட்டார் வாகனம் ஒன்றை சோதனையிட்ட போது மோட்டார் வாகனத்தின் ஓட்டுனர் வாகனத்தை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதன்போது குறித்த மோட்டார் வாகனத்தில் இருந்து 2 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தப்பிச் சென்ற மோட்டார் வாகன ஓட்டுனர் தம்புள்ள பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவருக்கு எதிராக இதற்கு முன்னர் 6 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டமைக்கான வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மோட்டார் வாகனத்தையும் கஞ்சாவினையும் பொலிஸார் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதுடன் பல்வேறு குழுக்கள் சந்தேக நபரை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தம்புள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment