பாத்ததும்ரை பிரதேச செயலகத்திற்குற்பட்ட இல 5 சீ பள்ளி, வீதி உடத்தலவின்னை, மடிகே, கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட முஹம்மது நஸார் முஹம்மத் நாஸீர் 2019.09.14 ஆம் திகதி கொழும்பு 07 இல் அமைந்துள்ள ஹெக்டர் கொப்பேகடுவ மகிந்த சில்வா அரங்கில் இலங்கை சமாதான பேரவையினால் கீர்த்தி ஶ்ரீ கெளரவ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இவர் 2015 ஆம் ஆணடு கண்டி நீதவான் நீதி மன்றத்தில் சமாதான நீதவானாகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இவர் ஜனாப் முஹம்மது நஸார் மற்றும் ஜானாபா சித்தி குறைஷா தம்பதினரின் புதல்வருமாவார்.
மீயுயர் நீதிமன்றக்கட்டிடத் தொகுதியின் முகாமைச் சபையில் பணிபுரியும் இவர் உடத்தலவின்னை மடிகே ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் கல்வி கற்றமை குறிப்பிடத்தக்கது.
Rihmy Hakeem
No comments:
Post a Comment