இந்திய பிரஜைகள் 44 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, September 5, 2019

இந்திய பிரஜைகள் 44 பேர் கைது

வீஸா காலாவதியான நிலையில் நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 44 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொம்பனித்தெரு பகுதியில் கட்டிட நிர்மாணப் பணியில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ள நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 வயது முதல் 50 வயது வரையானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இந்திய பிரஜைகளின் வீஸா காலாவதியானதை தொடர்ந்து, சுமார் மூன்று மாதங்கள் நாட்டில் தங்கியிருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment