உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதல் தொடர்பாக 293 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இன்று (05) பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 293 பேரில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 178 பேர் தடுப்பு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், குறித்த தீவிரவாதிகளின் 06 பில்லியன் பெறுமதியான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட 41 பேரின் 100 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
No comments:
Post a Comment