சுதந்­தி­ரக்­ கட்சியினால் வேட்­பாளர் ஒரு­வரைத் தெரி­வு­ செய்ய முடி­யாத நிலை - எம்மீது ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு முன்பு மஹிந்த மீது ஒழுக்­காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 5, 2019

சுதந்­தி­ரக்­ கட்சியினால் வேட்­பாளர் ஒரு­வரைத் தெரி­வு­ செய்ய முடி­யாத நிலை - எம்மீது ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு முன்பு மஹிந்த மீது ஒழுக்­காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்

இன்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி என்று ஒன்று இருக்­கி­றதா? இல்லையா? என்று தெரி­ய­வில்லை. 68 வரு­டங்­களைப் பூர்த்தி செய்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­ கட்சியினால் கேவலம் ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரைத் தெரி­வு ­செய்ய முடி­யாது உள்­ளது. கட்­சியின் செய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர எம்மீது ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு முன்பு மஹிந்த ராஜபக்ஷ மீது ஒழுக்­காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். பௌஸி தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஏ.எச்.எம்.பௌஸி உட்­பட 5 தேசிய பட்டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக கட்சி ஒழுக்காற்று நட­வ­டிக்கை எடுக்கத் தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக கட்­சியின் செய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்­துள்­ளமை தொடர்பில் வின­விய போதே அவர் இவ்­வாறு கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் செய­லாளர் பாரா­ளு­மன்ற உறுப்பினர் தயா­சிறி ஜய­சே­கர ஊடக மாநா­டொன்றில் பாராளுமன்ற உறுப்­பி­னர்­க­ளான லக்ஷ்மன் யாபா, எஸ்.பி.திசாநாயக்க, விஜித் விஜ­ய­முனி சொய்சா, டிலான் பெரேரா மற்றும் ஏ.எச்.எம். பௌஸி ஆகி­யோ­ருக்கு எதி­ராக ஒழுக்­காற்று நடவ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அதற்­கான கடி­தங்கள் அனுப்பி வைத்­தி­ருப்­ப­தா­கவும் நேற்றுத் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம்.பௌஸி தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஜனா­தி­ப­தி­க­ளையும் பிர­த­மர்­க­ளையும் உரு­வாக்­கிய கட்சி. இன்று இருந்­த­ இடம் தெரியாமல் இருக்­கி­றது. என்னைப் போன்­ற­வர்­களை கௌரவப்படுத்த தெரி­யா­த ­கட்சி. அக்­கட்­சியின் சிரேஷ்ட உதவித் தலை­வ­ராக நான் பதவி வகித்தேன். அப்­ப­த­வியைப் பறித்­தார்கள். மத்­திய கொழும்பு அமைப்­பா­ள­ராகக் கட­மை­யாற்­றினேன். அப்பதவியையும் பறித்­தார்கள். அதன் பின்பு அக்­கட்­சி­யுடன் எனக்கு என்ன உறவு தேவை.

நான் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு மாதாந்தம் 3000 ரூபா செலுத்தி வரு­கிறேன். நான் வேறு கட்­சியில் உறுப்­பு­ரிமை பெற்­றுக்­கொள்­ள­வில்லை. எனக்கு முன்பு கட்­சி­யி­லி­ருந்து எத்தனையோ பேர் பிரிந்து சென்று விட்­டார்கள். அவர்கள் மீது ஒழுக்காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. எங்­க­ளிடம் காரணம் கேட்­கி­றார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி வீழ்ந்து விட்­டது. மீண்டும் எழுந்­தி­ருக்க முடி­யாது. என்னைப் போன்ற சிரேஷ்ட உறுப்­பி­னர்­களை அகௌரவப்படுத்தியதன் பிரதிபலனே இது. எம்மை மதியாத கட்சியை நாமும் மதிக்கவில்லை. எம்மிடம் காரணம் கேட்பதற்கு கட்சிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. நான் என்றோ எஸ்.எல்.எப்.பியை மறந்து விட்டேன் என்றார்.

ஏ.ஆர்.ஏ.பரீல்
vidivelli

No comments:

Post a Comment