சஹ்ரான் தலைமையில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படவில்லை உண்மையாக அவரிடமிருந்த குண்டின் ரிமோட் கண்ட்ரோல் அமெரிக்காவிடமே இருந்துள்ளதென மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அபேதிஸ்ஸ தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “அமெரிக்காவின் உதவியுடனேயே தொடர் குண்டுத் தாக்குதல் நாட்டில் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளுக்குள் நுழைவதற்காக பயன்படுத்தும் பிரதான யுக்திதான் மதப் பிரச்சினையை உருவாக்குவதாகும்.
அந்தவகையில் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் வைத்திருந்த குண்டிற்கான ரிமோட் கண்ட்ரோல் அமெரிக்காவின் கைகளிலேயே இருந்தது.
நாங்கள் பயங்கரவாதிகளைத் துரத்தும் தலைவர்களாக இருக்காவிடின் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிக்கு நாடு உள்ளாகும்” என அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment