உங்களால் வெற்றி பெற முடியுமா? வெற்றி பெறுவீர்களா என்று கேட்கின்றார்கள். பிரேமதாச தேர்தலில் தோல்வியுற்றதில்லை, இந்த பிரேமதாசவும் தோற்க போவதில்லை - News View

About Us

Add+Banner

Sunday, August 4, 2019

demo-image

உங்களால் வெற்றி பெற முடியுமா? வெற்றி பெறுவீர்களா என்று கேட்கின்றார்கள். பிரேமதாச தேர்தலில் தோல்வியுற்றதில்லை, இந்த பிரேமதாசவும் தோற்க போவதில்லை

Sajith+%25282%2529
எஸ்.எம்.எம்.முரஷித்
மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நவம்பர் வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு நான் தயாராகி விட்டேன் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரமேதாச தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலையில் இந்திய நிதி உதவி மூலம் அமைக்கப்பட்ட காந்தி மாதிரிக் கிராமம் மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல்மஜ்மா நகரில் அமைக்கப்பட்ட முகைதீன் அப்துல் காதர் மாதிரிக் கிராமம் என்பன மக்களிடம் நேற்று சனிக்கிழமை கையளிக்கப்பட்டது.

கல்குடாப் பிரதேசத்தில் மக்களிடம் கையளிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்திற்கான பிரதான நிகழ்வு ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக அமைச்சர் சஜித் பிரமேதாச  கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
01+%25282%2529
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் எமது நாட்டு மக்களுக்காக, அவர்களுடைய தேவைக்காக, மக்களுடைய அபிவிருத்திக்காக என்னை அர்ப்பணிப்பதே எனது நோக்கம். எனவே அனைவரும் ஒன்றிணைந்து நீங்கள் வழங்கும் ஒத்துழைப்புடன் நட்டு மக்களை ஐக்கிய இலங்கைக் கூடாக, தேசிய பாதுகாப்புக் கூடாக, சிறந்த முற்போக்கு அபிவிருத்திக் கூடாக நாட்டை கட்டியெழுப்புவதே எனது நோக்கம்.

உங்களால் வெற்றி பெற முடியுமா? வெற்றி பெறுவீர்களா என்று கேட்கின்றார்கள். பிரேமதாச தேர்தலில் தோல்வியுற்றதில்லை, இந்த பிரேமதாசவும் தோற்க போவதில்லை. இந்தமுறை வெல்லப் போவது பிரேமதாச மாத்திரமல்ல மக்கள். எனவே உங்களின் வியர்வை மற்றும் உழைப்பை உயர்ந்தவனாக உங்களில் ஒருவனாக, எனது ஆடை எந்த மாற்றமும் வராமல், சிம்மாசனத்தில் அமர்வதற்கு ஆசைப்படுபவன் அல்ல.

உங்ளோடு இருந்து கொண்டு உங்களுக்காக சேவை செய்வதற்கு எப்போதும் உள்ளேன் என்பதை கூறுவது வேறு யாருமல்ல சஜித் பிரேமதாச என்பதை கூறிக் கொள்கின்றேன். நாட்டு மக்கள் புதிய பாதையை, புதிய வேலைத் திட்டங்களை நோக்குகின்றார்கள். புதிய அபிவிருத்தி வளங்கள் என்பவற்றுக்கான நாட்டிலே தலைவர்களை தெரிவு செய்கின்றார்கள். தொழில் முயற்சி மற்றும் தொழில் நுட்பம் ஆகிய இரண்டிலும் தான் ஒரு நாடு அபிவிருத்தியின் பால் ஈர்க்கப்படும்.
01+%252814%2529
இன்று அரசியல்வாதிகள் மேடைகளில் பேசுகின்றார்கள். தொழில் முயற்சியை பேசுகின்றார்களே தவிர தொழில் முயற்சியின் மூலம் இலங்கை அபிவிருத்தி அடைந்துள்ளது என்றால் பொய் என்றே கூற வேண்டும். கனிசமான அளவுக்கு இலங்கையில் தொழில் முயற்சியை பயன்படுத்தவில்லை.

அரசியல்வாதிகள் பேசும் பேச்சளவிற்கு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி காணவில்லை என்றே கூறவேண்டும். நான் உங்கள் மத்தியில் வீணான பேச்சுக்களை பேசவரவில்லை. வெறும் பேச்சில் மாத்திரம் தங்கியிருப்பவன் அல்ல. நவம்பர் மாத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு சரியான முடிவாக இருந்தால் அந்த முடிவின் பால் செயற்பட ஆசைப்படுகின்றேன்.

இலங்கையைப் பொறுத்தவரையில் 332 பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றது. இந்த பிரதேச செயலகங்களில் தொழிற்சாலைகள், தொழில்பேட்டைகளை அமைக்க இருக்கின்றேன். காலஞ்சென்ற எனது தந்தை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இறுநூறு தொழில் பேட்டைகளை அமைத்தார்கள். இதனால் ஏழை எழிய மக்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.
01+%252812%2529
எனவே எனது தந்தைம வழியில் நானும் 332 பிரதேச செயலகங்களில் தொழில் பேட்கைளை உருவாக்கி உங்களையும், உங்கள் பிரதேசத்தையும் அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டங்களை கொண்டு வருவேன். நீங்கள் ஒத்துழைக்கும் பொழுது உங்களுக்கான இந்த பணியை செய்வேன் என்றார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.தரங்ஜித் சிங் சன்து, இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட சிரேஷ்ட முகாமையாளர் க.ஜெகநாதன், தேசிய வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள், மதகுருமார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலையில் இந்திய நிதி உதவி மூலம் காந்தி மாதிரிக் கிராமத்தில் 25 வீடுகள் மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வீடமைப்பு அதிகார சபையின் நிதி உதவி மூலம் அல்மஜ்மா நகரில் முகைதீன் அப்துல் காதர் மாதிரிக் கிராமத்தில் ஐம்பது வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது.
01+%252816%2529
இதன்போது இரண்டு வீட்டுத் திட்டத்திலும் அமைக்கப்பட்ட வீட்டுத் தோட்டத்தில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றவர்களுக்கு பணப்பரிசும், இரண்டு வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு வீட்டுப் பத்திரமும், ஐம்பது பாடசாலை மாணவர்களுக்கு புத்தக் பைகளும், பத்து பாலர் பாடசாலைகளுக்கு தண்ணீர் பில்டெர், ஐம்பது மேசன் தொழில் பயிற்சி பெற்றவர்களுக்கான உபகரணங்கள், மூக்கு கண்ணாடிகள், தளபாடங்கள், கடன் உதவிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலய மாணவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றதுடன், முகைதீன் அப்துல் காதர் மாதிரிக் கிராமத்தில் பயனாளி ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் இருப்பத்தைந்து கிலோ எடையூடைய வத்தகப் பழங்கள் விளைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகைதீன் அப்துல் காதர் மாதிரிக் கிராம வீட்டு திட்டத்திற்கு இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில் குடி நீர் திட்டத்திற்கு முப்பது இலட்சம் ரூபாவும், வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு பதினைந்து இலட்சம் ரூபாவும், வீதி மற்றும் உட்கட்டமைப்பு வேலைத் திட்டத்திற்கு பதினைந்து இலட்சம் ரூபாவும் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
01+%252818%2529
01+%252820%2529
01+%252821%2529
01+%25289%2529
01+%252813%2529
01+%25285%2529
01+%252836%2529
01+%252843%2529
01+%252833%2529
01+%252838%2529
01+%252845%2529
01+%252824%2529
01+%252844%2529
01+%252839%2529
01+%252832%2529
01+%252847%2529
01+%252850%2529
01+%252849%2529

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *