புத்தளம் - உடப்பு பள்ளிவாசல்பாடு பகுதியிலுள்ள வீட்டிலிருந்து தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று (25) முற்பகல் பொலிஸாரின் அவசர அழைப்புப் பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தந்தை, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன், ஆண் பிள்ளைகள் இருவருக்கும் நஞ்சூட்டப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளனர்.
31 வயதான தந்தையும் 9 மற்றும் 6 வயதான சிறுவர்கள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்களின் சடலங்கள் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணைகளுக்காக தந்தையின் சடலம் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment