கொழும்பின் சில வீதிகளில் 3 மாதங்களுக்கு வாகனப் போக்குவரத்துக்கு மட்டுப்பாடு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 1, 2019

கொழும்பின் சில வீதிகளில் 3 மாதங்களுக்கு வாகனப் போக்குவரத்துக்கு மட்டுப்பாடு

கருவாத்தோட்டம் மற்றும் பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளின் சில வீதிகளுடான வாகனப் போக்குவரத்து இன்று (01) முதல் 3 மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மழைநீர் வழிந்தோடும் வகையில் சுரங்கப் பாதையொன்றை நிர்மாணிக்கும் முகமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய காலி வீதி கிலேன் ஆபர் பிரதேசம், கடற்கரை வீதி வரை இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாகனச் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்த முடியும் என்பதோடு 8 ஆவது ஒழுங்கை, ஹேக் பாதை வழியாக காலி வீதிக்கு பயணிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment