நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவ பிரதேசம் உல்லாச பயணிகள் விரும்பும் பிரதேசங்களில் ஒன்றாக கடந்த டிசம்பர் மாதம் அமையாளங்காணப்பட்டதாக. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பொகவந்தலாவ நுவரெலியா நானுஓயா மற்றும் கித்துல்கலை போன்ற பிரதேசங்களை உல்லாசத்துறை பிரதேசமாக மாற்றி அமைப்பதுடன் மஸ்கெலியா நல்லதண்ணி நோட்டன் பிரிட்ஜ் ஆகிய பிரதேசங்களையும் உல்லாச பிரயாணத்துறை பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் கூறினார்.
பிரதமர் நுவரெலியா மாவட்ட மஸ்கெலியா நல்லத்தண்ணி பிரதேசத்திற்க்கு நேற்றுவிஐயம் செய்தார்.
பிரதமர் நல்லதண்ணி சமன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகயில் கலந்துகொண்ட பின் நல்லத்தண்ணி விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டர்.
ஏப்ரல் மாதம் 21ம் திகதி ஈஸ்டர் தினத்தன்று ஏற்பட்ட அசம்பாவிதங்கள் நாட்டினுடைய உல்லாச பிரயாணத்துறைக்கும் பொருளாதாரத்திற்கும் பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அபிவிருத்தியில் உல்லாச பிரயாணத்துறை பாரிய பங்களிப்பை வழங்குவதால், நாட்டின் மலையக பிரதேசங்கள் உல்லாச பயணிகள் விரும்பதக்க கூடிய வகையில் அபிவிருத்திகளை முன்னெடுப்பது எமது இலக்காகும்.
ஆசிய நாட்டினல் அணைவரும் விரும்ப கூடிய புனித சிவனொளிபாதமலை வழிபாட்டு ஸ்தலம் அமைந்துள்ளதால் இங்கு சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லீகள் மற்றும் கிறிஸ்தவர்கள் அனைவரும் வருகை தருவதோடு வெளிநாட்டவர்களும் அதிகளவில் வருகை தருகின்றனர்.
ஆகவே இப்பிரதேசத்தில் காணப்படும் குளிர் சிகரமான காலநிலையை கருத்திற் கொண்டு இயற்கை வளங்களை பாதுகாத்து இப்பகுதியின் சூழலில் அதிக அக்கறை கொண்டு அபிவிருத்தி செய்வது தொடர்பில் அரச திணைக்களங்கள் மற்றும் பெருந்தோட்ட நிர்வாகங்கள் ஆகியவற்றுடன் கலந்துரையாடப்பட்டு இப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் விடயம் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸவின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளேன்.
அதேபோன்று ஹட்டன் நகரம் தற்போது அபிவிருத்தி அடைந்து வருகின்றது போல் நானுஓயா நகரம், நுவரெலியா நகரம், கித்துல்கல பிரதேசம் ஆகியவையும் மேலும் அபிவிருத்தி அடைய வேண்டும் என்பது எமது நோக்கமாக உள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் சிவனொளிபாதமலை வழிபாட்டு நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதால் பிரதேசத்தில் உல்லாச பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாக அபிவிருத்தி பணிகளை பூர்த்திச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment