மீண்டும் நாளை முதல் ரயில்களில் பொதிகளை அனுப்பலாம் - News View

About Us

About Us

Breaking

Friday, May 31, 2019

மீண்டும் நாளை முதல் ரயில்களில் பொதிகளை அனுப்பலாம்

தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில்களில் பொதிகளை அனுப்பும் நடவடிக்கைகள் நாளை (01) முதல் ஆரம்பமாகவுள்ளன. ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலின் பின்னர் ரயில்களில் பொதிகளை அனுப்பும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.

இதன் பிரகாரம், எதிர்வரும் காலங்களில் பொதி செய்யும் நடவடிக்கைகள் அனைத்தும் ரயில் நிலைய பொறுப்பதிகாரி முன்னிலையில் முன்னெடுக்கப்படவுள்ளன.

பொதிகளை அனுப்பும் நேரத்திற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்பாகவே ரயில் நிலையத்திற்கு வருகை தந்து, பொதியிடல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ரயில்வே திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

ரயில்களில் பொதிகளை அனுப்பும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதால் ரயில்வே திணைக்களத்திற்கு 12 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment