பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு பிரதமரின் பங்கேற்புடன் அம்பாறையில் இடம்பெற்றது - News View

About Us

About Us

Breaking

Friday, May 31, 2019

பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு பிரதமரின் பங்கேற்புடன் அம்பாறையில் இடம்பெற்றது

ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் வறுமை நிலையற்ற இலங்கையினை கட்டியெழுப்பும் பொருட்டு அரசின் புதிய திட்டத்திற்கு அமைய புதிய பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களது பங்கேற்புடன் அமைச்சர் தயா கமகே தலைமையில் அம்பாறை நகர சபைத்திடலில் இடம்பெற்றது.

இதில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

குறித்த செயற்திட்டத்திற்கான மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு எதிர்வரும் 13ஆம் திகதி ஏறாவூரில் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தலைமையில் அமைச்சர் தயா கமகே அவர்களதும் பங்கெடுப்புடன் இடம்பெற உள்ளது.

இதன்போது 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ள சுமார் 28000 குடும்பங்களுக்கான சமுர்த்தி உரித்துப்படிவங்கள் வழங்கி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment