சிலாபத்தில் குழப்பம் விளைவித்த அனைவரையும் கைது செய்யுங்கள் – அய்யூப் அஸ்மின் வலியுறுத்து - News View

About Us

About Us

Breaking

Sunday, May 12, 2019

சிலாபத்தில் குழப்பம் விளைவித்த அனைவரையும் கைது செய்யுங்கள் – அய்யூப் அஸ்மின் வலியுறுத்து

சிலாபத்தில் நேற்று கலகத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அய்யூப் அஸ்மின்.

“முஸ்லிம்கள் மீது அத்துமீற இலங்கைச் சட்டம் அனுமதிக்கின்றதா?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் இட்ட முகநூல் பதிவொன்றைத் தவறாக விளங்கிக் கொண்ட சிங்கள இளைஞர் குழு சிலாபம் நகரில் நேற்று குழப்பத்தை விளைவித்துள்ளது. 

அதன் பின்னர் அங்கு நிலவிய பதற்றத்தையடுத்து சிலாபம் பொலிஸ் பிரிவில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, முகநூலில் பதிவை இட்ட முஸ்லிம் வர்த்தகரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அய்யூப் அஸ்மின் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment