நாளை முதல் கடவுச்சீட்டுக் கட்டணத்தில் மாற்றம் - News View

About Us

About Us

Breaking

Friday, May 31, 2019

நாளை முதல் கடவுச்சீட்டுக் கட்டணத்தில் மாற்றம்

நாளை (ஜுன் 01) முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் பஸன் ரத்நாயக்க தெரிவித்தார்.

சாதாரண சேவையில் பெற்றுக்கொள்ளும் கடவுச்சீட்டுக்கு இதுவரை காலமும் அறவிடப்பட்டு வந்த 3,000 ரூபா கட்டணம், தற்போது 3,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு, ஒரு நாள் சேவையில் பெற்றுக்கொள்ளும் கடவுச்சீட்டுக்கு இதுவரை காலமும் 10,000 ரூபா கட்டணம் 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சாதாரண சேவையில் பெற்றுக்கொள்ளும் 16 வயதிற்கு கீழ்பட்டவர்களுக்கான கடவுச்சீட்டுக் கட்டணம் 2,000 ரூபாவிலிருந்து 2,500 ரூபாவாகும்.

அத்தோடு, ஒரு நாள் சேவையில் பெற்றுக்கொள்ளும் 16 வயதிற்கு கீழ்பட்டவர்களுக்கான கடவுச்சீட்டுக் கட்டணம் 5,000 ரூபாவிலிருந்து 7,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டை திருத்தம் செய்வதற்கான கட்டணம் 500 ரூபாவிலிருந்து 1,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment