க.பொ.த சாதாரண தரப் பரீட்சை - கணிதம், ஆங்கிலத்தில் சித்தியடைந்தோர் அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 3, 2019

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை - கணிதம், ஆங்கிலத்தில் சித்தியடைந்தோர் அதிகரிப்பு

வெளிவந்துள்ள 2018ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சார்த்திகளின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களில் சித்தியடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளது.

இதற்கமைய 2017ஆம் ஆண்டு கணித பாடத்தில் 67.24 சதவீதத்தால் சித்தியடைந்திருந்த மாணவர்களின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டில் 68.30 சதவிதத்தால் அதிகரித்துள்ளது. அதேபோன்று 2017ஆம் ஆண்டில் ஆங்கிலப் பாடத்தில் சித்தியடைந்திருந்த 51.12 சதவீத மாணவர்களின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டில் 54.90 மாக உயர்வடைந்துள்ளது. அத்துடன் தமிழ் மொழி மற்றும் இலக்கிய பாடத்தில் 2017ஆம் ஆண்டில் சித்தியடைந்திருந்த 88.72 சதவீத மாணவர்களின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டில் 90.08 ஆக அதிகரித்துள்ளது.

எனினும் 2017ஆம் ஆண்டில் விஞ்ஞான பாடத்தில் சித்தியடைந்தவர்களின் எண்ணிக்கை 73.46 சதவீதத்திலிருந்து 2018ஆம் ஆண்டில் 69.83 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை இவ்வருடம் க.பொ.த உயர் தரம் கற்பதற்கு தகுதியுடையோரின் எண்ணிக்கை 2.04 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் 2 இலட்சத்து 16 ஆயிரத்து 815 மாணவர்கள் உயர் தரம் கற்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். 

இது 73.05 சதவீதமாகும். 2018ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2 இலட்சத்து 22 ஆயிரத்து 281 ஆக அதிகரித்துள்ளது. இது 75.09 சதவீதமென்றும் பரீட்சைகள் திணைக்களம் மதிப்பிட்டுள்ளது.

மேலும் 2018ஆம் ஆண்டில் ஒன்பது பாடங்களிலும் 'எ' சித்தி பெற்றவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளது. 2017ஆம் ஆண்டில் 9 இலட்சத்து 960 பேர் இவ்வாறு 'எ' சித்தி பெற்றிருந்தனர். இது 3.36 சதவீதமாகும். எனினும் 2018ஆம் ஆண்டில் 'எ' சித்தி பெற்றவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்து 261 ஆக குறைவடைந்துள்ளது. இது 3.13 சதவீதமென்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று அனைத்து பாடங்களிலும் வெற்றிபெறாத மாணவர்களின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டு 2.46 சதவீதத்திலிருந்து 2018ஆம் ஆண்டில் 2 சதவீதமாக குறைவடைந்துள்ளது. அத்துடன் அனைத்து பாடங்களிலும் தோல்வி பெற்ற மாணவர்களின் சதவீதம் 2011ஆம் ஆண்டு 4.74 சதவிதமாகவும் 2012இல் 4.13 சதவீதமாகவும் 2013இல் 3.57 சதவீதமாகவும் 2015இல் 3.18 சதவீதமாகவும் 2016இல் 3.11 சதவீதமாகவும் இருந்துள்ளது. 

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது அனைத்து பாடங்களிலும் தோல்வியை தழுவியுள்ள மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவடைந்து வருவதையும் அவதானிக்க முடிந்துள்ளது.

லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment