வாழைச்சேனையில் போதை பொருள் ஒழிப்பு வீதி நாடகம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 10, 2019

வாழைச்சேனையில் போதை பொருள் ஒழிப்பு வீதி நாடகம்

எஸ்.எம்.எம்.முர்ஷித் 
ஜனாதிபதியின் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” செயற்றிட்டம் நேற்று திங்கட்கிழமை 12ம் திகதி முதல் 12.04.2019ம் திகதி வரை வெள்ளிக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது.

அந்த வகையில், போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு வீதி நாடகம் இன்று 09.04.2019ம் திகதி செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.தேவ மனோகரி பாஸ்கரன் தலைமையில் போதைப்பொருள் அபாயத்தினை ஒழித்து, வறுமையினைக் குறைத்து, அபிவிருத்தியினை மேம்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் வீதி நாடகம் இடம்பெற்றது.

குறித்த போதைப்பொருள் ஒழிப்பு வீதி நாடகம் விநாயகபுரம் கிராம மக்கள் மத்தியில் இடம்பெற்றதுடன், வீதி நாடகம் பாடசாலை மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது.

இவ்வீதி நாடகத்தினை செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

No comments:

Post a Comment