மதுஷுடன் துபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நபருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 10, 2019

மதுஷுடன் துபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நபருக்கு விளக்கமறியல்

மாகந்துரே மதுஷுடன் துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மொஹமட் நசீம் மொஹமட் பைசர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்க முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

37 வயதான மொஹமட் நசீம் மொஹமட் பைசரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்ததை அடுத்து, 24 மணித்தியாலங்கள் அவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் நேற்று (09) அனுமதி வழங்கியது.

கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபராக மொஹமட் நசீம் மொஹமட் பைசர் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொஹமட் நசீம் மொஹமட் பைசர் கொழும்பு – 10, மாளிகாவத்தை பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment