அவுஸ்திரேலியாவிலிருந்து பசுக்களை இறக்குமதி செய்யும்போது பயன்படுத்திய ஆவணங்களை இன்று கையளிக்குமாறு, கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பிலான விசாரணைகளுக்காக ஆவணங்கள் கையளிக்கப்பட வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே, பசுக்களை இறக்குமதி செய்யும்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் முறைகேடு தொடர்பில் சாட்சி வழங்கும், பசுக்களைப் பாதுகாக்கும் அமைப்பின் அமல் சூரியகே தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சிலர் செயற்பட்டுள்ளதாக நேற்று இடம்பெற்ற சாட்சி விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள தமக்கு சொந்தமான காணிக்குள் நுழைந்த பொருளாதார அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் இவ்வாறு செயற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள ஆணைக்குழு அது தொடர்பில் துரிதமாக விசாரணைகளை முன்னெடுத்து மஸ்கெலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிக்கையொன்றை வழங்குமாறு ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment