வீதி வெளிச்சத்திற்காக எல்ஈடி வீதி மின்குமிழ்களை பொருத்தும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 10, 2019

வீதி வெளிச்சத்திற்காக எல்ஈடி வீதி மின்குமிழ்களை பொருத்தும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

தற்பொழுது பயன்படுத்தப்படும் பாரம்பரிய வீதி மின் விளக்குகளுக்கு பதிலாக வீதி வெளிச்சத்திற்காக செயல்திறன் மிக்க எல்ஈடி வீதி மின்குமிழ்களை பொருத்தும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரை ஒன்று கொரிய டெலிகொம் நிறுவனத்திடம் இதற்கு முன் சமர்ப்பிக்கப்பட்டது. 

இந்த பரிந்துரை தொடர்பில் மதிப்பீடு செய்து விடயங்களை சமர்ப்பிப்பதற்காக அதிகாரிகள் குழுவொன்று அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டது. 

உத்தேச திட்டத்தின் மூலம் பெறக்கூடிய நன்மைகளைப் போன்று இந்த கட்டமைப்பை பயன்படுத்தி கொழும்பு நகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் பாதுகாப்பு மற்றும் கழிவு முகாமைத்துவத்தை முறையாக முன்னெடுப்பதற்கு சீசீடீவீ புகைப்படக் கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்கு முடிந்தமை பொதுமக்களால் பயன்படுத்தக்கூடிய WIFI வசதிகளை பெற்றுக் கொடுத்தல் போன்ற பயன்கள் தொடர்பில் அதிகாரிகள் குழுவால் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி வீதி வெளிச்சத்திற்காக செயல்திறன் மிக்க எல்ஈடி வீதி மின்குமிழ்களை பொருத்துவதற்கான திட்டத்தை கொரிய டெலிகொம் நிறுவனத்திற்கு வழங்கி நடைமுறைப்படுத்தவதற்கு உள்ளக மற்றும் பொது நிர்வாக அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment