ஊவா மாகாணத்தின் அனைத்து அரச வைத்தியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தெமோதர மாவட்ட வைத்தியசாலைக்கு மத்தியில் வீதியொன்றை நிர்மாணித்தல் மற்றும் அது தொடர்பான பிரச்சினையின்போது ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் திசாநாயக்க செயற்பட்ட விதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை தொடர்பில் மாகாண ஆளுநருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்ட போதிலும் தீர்வொன்றை எட்டமுடியாமல் போனதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊவா மாகாண தொடர்பாளர் டாக்டர் பாலித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தெமோதர பிரதேச வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதாக அங்குள்ள நிர்வாகக்குழு, பதுளை மாவட்ட சுகாதார சேவை அலுவலகத்துக்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் விஜேசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ இல்லமொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வினவுவதற்காக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவை தொடர்புகொள்ள நாம் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.
No comments:
Post a Comment