இரு குழுக்களுக்கு இடையிலான மோதலில் ஒருவர் பலி - 7 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 30, 2019

இரு குழுக்களுக்கு இடையிலான மோதலில் ஒருவர் பலி - 7 பேர் காயம்

யாழ். தென்மராட்சி - பாலாவிப் பகுதியில் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். 

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலாவிப் பகுதியில் இரு தரப்பிலும் முப்பது பேர் அடங்கிய குழு வாள்கள், ஈட்டிகள் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். 

இச்சம்பவத்தில் பாலாவியைச் சேர்ந்த 62 வயதான தம்பிராஜா பொன்னுத்துரை என்பவருடைய மார்பில் கூரிய ஆயுதம் பாய்ந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

மேலும், அதே இடத்தைச் சேர்ந்த சேர்ந்த 25 வயதான யே.திலிசாந், 39 வயதான சோ.கணேசமூர்த்தி, 46 வயதான தம்பிராஜா யோகராஜா, 38 வயதான த. கவிதரன், 52 வயதான நடராஜா வளர்மதி, 35 வயதான செல்வராஜா குமார் மற்றும் 39 வயதான வைரமுத்து தவசீலன் ஆகியோர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுளளனர். 

கடந்த இரு வாரகாலமாக இரு தரப்பினருக்கு இடையே முறுகல் நிலைமை இருந்தது என்று பிரதேச மக்கள் கூறுகின்றனர். மணல் அகழ்வு தொடர்பான பிணக்கே இந்த முறுகல் நிலமைக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பிரச்சினை காரணமாகக் கடந்த மாதமும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது என்றும் அந்தப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

கொடிகாமம் - பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலாவி மற்றும் கெற்பேலிப் பகுதிகளில் இந்த வராத்தினுள் இது மூன்றாவது வாள்வெட்டுச் சம்பவமாகும். நேற்றுமுன்தினம் மற்றும் அதங்கு முந்திய நாட்களில் குறித்த கும்பலிடையே இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சம்பவம் தொடர்பான தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

யாழ் நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment