சோதனை நடவடிக்கையின் போது முந்தலில் 12 பேர் சந்தேகத்தின் பேரில் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 30, 2019

சோதனை நடவடிக்கையின் போது முந்தலில் 12 பேர் சந்தேகத்தின் பேரில் கைது

மதுரங்குளி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 12 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

முந்தல் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பல கிராமங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை விஷேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இராணுவத்தினருடன் இணைந்து முந்தல் பொலிஸார் சொவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை குறித்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 

இதன்போது வீடுகள், வர்த்தக நிலையங்கள் என்பன கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சோதனை நடவடிக்கையின் போது கூர்மையான ஆயுதங்கள் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் சந்தேசத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விஷேட சோதனை நடவடிக்கைகள் யாவும் 143ஆவது பலசேனாதிபதி பிரிகேடியர் தம்மிக்க திசாநாயக்கவின் ஆலோசனையில் இராணுவ வீரர்களும், முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் ஏக்கநாயக்கவின் ஆலோசனையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

புத்தளம் நிருபர் ரஸ்மின்

No comments:

Post a Comment