எம்.எஸ்.எம்.நூர்தீன்
காங்கேயனோடை பிரதேசத்தில் முதன் முறையாக இலங்கை நிருவாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்த யு.எம்.அஸ்லம் அவர்களை கௌரவிக்கும் வைபவம் சனிக்கிழமை மாலை (02.03.2019) காங்கேயனோடை முகைதீன் ஜும்ஆப்பள்ளிவாயலில் நடைபெற்றது.
காங்கேயனோடை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.பி.எம்.றசீம் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் நிந்தவூர் உதவி பிரதேச செயலாளர் ஓ.எம்.அன்சார் நழிமி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.இப்றாகீம் கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் முக்மட் றுஸ்வின் மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர்களான முகம்மட் அன்சார், முகம்மட் நசீம், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.ஜாபீர் முன்னாள் காதி நீதி ஏ.எம்.ஹிழ்ர், ஒல்லிக்குளம் அல்ஹம்றா வித்தியாலய அதிபர் மௌலவி ஏ.சி.எம்.றிபாய் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் காங்கேயனோடை பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது இம்முறை இலங்கை நிருவாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்த இப்பிரதேசத்தைச் சேர்ந்த யு.எம்.அஸ்லம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
No comments:
Post a Comment