மகளிர் அமைப்புக்கு நிதி திரட்டும் துவிச்சக்கர வண்டி சவாரி மட்டக்களப்பில் நிறைவு - நாமல் எம்.பி உள்ளிட்ட 30 பேர் பங்கேற்பு - News View

About Us

About Us

Breaking

Monday, March 4, 2019

மகளிர் அமைப்புக்கு நிதி திரட்டும் துவிச்சக்கர வண்டி சவாரி மட்டக்களப்பில் நிறைவு - நாமல் எம்.பி உள்ளிட்ட 30 பேர் பங்கேற்பு

தேவை நாடும் மகளிர் அமைப்புக்கு நிதி திரட்டுவதற்கான துவிச்சக்கர வண்டி சவாரி மட்டக்களப்பில் நேற்று (03) ஞாயிற்றுக்கிழமை காலை நிறைவடைந்தது. 

தேவை நாடும் மகளிர் அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக துவிச்சக்கர வண்டி சவாரி புத்தளத்தில் ஆரம்பமாகி அநுராதபுரத்திற்கு வந்து பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பில் நிறைவடைந்தது. 

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜகக்ஷ் உள்ளிட்ட கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்து 30 பேர் இந்த சைக்கிள் சவாரியில் கலந்து கொண்டனர். 

இவர்கள் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மண்டபத்தில் வைத்து வரவேற்கப்பட்டனர். இவர்களுக்கு மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள் மலர்ச் செடிகளை வழங்கி வரவேற்றனர். 

இதன் போது தேவை நாடும் மகளிர் அமைப்பின் இணைப்பாளர் சந்திரா தியாகராசா தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ் மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஏ.அஸீஸ் உட்பட மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் பெண்கள் சிறுவர் பகுதி பொறுப்பதிகாரி மற்றும் தேவை நாடும் மகளீர் அமைப்பின் மட்டக்களப்பு பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

புதிய காத்தான்குடி நிருபர்

No comments:

Post a Comment