காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர உயர் தர கலைப் பிரிவில் கல்வி கற்றுவரும் முஹம்மட் சனூன் பாத்திமா ஷரூபா சுற்றாடல் முன்னோடிக் கழகத்தின் 2018ம் ஆண்டுக்கான ஜனாதிபதி பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்தப் பதக்கமும் அதற்கான சான்றிதழும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் இந்த மாணவிக்கு வழங்கப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு இந்தப் பதக்கத்தை வென்ற முஸ்லிம் மாணவியாக மேற்படி ஷரூபா திகழ்கின்றார்.
சிறுவர் மகளிர் அமைச்சினால் வழங்கப்பட்ட 2018ம் ஆண்டுக்கான தேசிய சாதனை படைத்த மாணவி என்ற விருதையும் இம்மாணவி பெற்றுள்ளார்.
இந்த மாணவி 01.03.2019 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வைத்து மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் அவர்களினாலும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தேசிய மாணவர் பாராளுமன்றத்தில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மாணவர் பாராளுமன்ற உறுப்பினராக இம்மாணவி இருப்பதுடன் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதரண தரப் பரீட்சையிலு 9 ஏ சித்திகளையும் பெற்றுள்ளார்.
காத்தான்குடி 6ம் குறிச்சி இராசா ஆலீம் வீதியில் வசிக்கும் இம்மாணவி மட்டக்களப்பு மத்தி வலயத்திலும் காத்தான்குடியிலும் இந்தப் பதக்கத்தை வென்ற முதல் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மாணவி இந்த பதக்கத்தினை வென்றதன் மூலம் காத்தான்குடிக்கும் அவர் கல்வி கற்கும் காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசியப் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
எம்.எஸ்.எம்.நூர்தீன்- காத்தான்குடி
No comments:
Post a Comment