கொட்டாஞ்சேனையில் ஒருவர் ஸ்குரூ ரைவினரினால் குத்திக் கொலை - News View

About Us

About Us

Breaking

Friday, March 8, 2019

கொட்டாஞ்சேனையில் ஒருவர் ஸ்குரூ ரைவினரினால் குத்திக் கொலை

கொட்டாஞ்சேனையில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

தெமட்டகொடையைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை, சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள பழைய இரும்புகளைச் சேகரிக்கும் நிலையமொன்றிலேயே நேற்று (07) இச்சம்பவம் இடம்பெற்றது.

மேற்படி வேலைத்தளத்தில் தொழில் புரிந்துவந்த ஒருவர் மேற்படி நபரை ஸ்குரூ ரைவினரினால் தாக்கியுள்ளார். இச்சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment