பதினொரு வருடமாக சிறப்பாக இயங்கிவரும் நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரியின் முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டி - News View

About Us

About Us

Breaking

Monday, March 4, 2019

பதினொரு வருடமாக சிறப்பாக இயங்கிவரும் நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரியின் முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டி

எச்.எம்.எம்.பர்ஸான்
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரியின் முதலாவது கன்னி இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு நேற்று (3) கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் ஏ.ஹபீப் காஸிமி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ் இறுதிநாள் நிகழ்வில் மாணவர்கள், பழைய மாணவர்கள், கல்லூரியின் உலமாக்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மூன்று இல்லங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் ரஹ்மா இல்லம் 289 புள்ளிகளைப் பெற்று முதலிடமும், ஹிஜ்ரா இல்லம் 213 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடமும், அரபா இல்லம் 130 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடமும் பெற்றுக் கொண்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதோடு ஏனைய அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ.அசீஷுர் ரஹீம், கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவரும் கலாசார உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி, காவத்தமுனை அர் ரஹ்மத் விசேட தேவையுடையோர் பாடசாலையின் தலைவரும் எழுத்தாளருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.அரபாத் சஹ்வி, தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். இஸ்மாயில் மதனி, தியாவட்டவான் கிராம சேவகர் ஏ.எல்.எம்.ஜஃபர், ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய அதிபர் ஏ.எல்.அபுல் ஹசன், கேணிநகர் மதீனா வித்தியாலய அதிபர் ஏ.மீரா முகைதீன், மீராவோடை உதுமான் வித்தியாலய அதிபர் எம்.பீ.முபாரக் ஆகியோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment