எச்.எம்.எம்.பர்ஸான்
கிழக்கு மாகாணத்தில் கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள நோய் காரணமாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மாட்டிறைச்சிக் கடைகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், அண்மைக் காலமாக கிழக்கு மாகாணத்தில் கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் காரணமாக சபையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்களினால் அதன் இறைச்சிகளை மனிதர்கள் உட்கொள்வதன் மூலம் எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாதென்று கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப் பணிப்பாளர் மக்களுக்கு அறிவித்தும் மக்கள் இவ்விடயம் தொடர்பில் அச்சமான சூழ்நிலையில் காணப்படுகின்றனர். இதனால் மாட்டிறைச்சிக் கடைகளுக்கும் வியாபாரம் குறைவாகக் காணப்படுகின்றது.
இவ்வாறான விடயங்களைக் கருத்திற் கொண்டு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி, கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கு அமைய இத் தீர்மானம் நேற்று (3) நிறைவேற்றப்பட்டுள்ளதாக தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
எனவே மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள இந் நோய்த்தாக்கம் தொடர்பிலான முழுமையான ஆய்வரிக்கை கிடைக்கப் பெறும் வரைக்கும் மாட்டிறைச்சிக் கடைகளை மூடுவதற்கு தற்காலிக தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தவிசாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment