குவைத் நாட்டில் பணிப் பெண்களாக பணி புரிந்த 52 பேர் நாடு திரும்பினர் - News View

About Us

About Us

Breaking

Friday, March 1, 2019

குவைத் நாட்டில் பணிப் பெண்களாக பணி புரிந்த 52 பேர் நாடு திரும்பினர்

குவைத் நாட்டில் பணிப் பெண்களாக பணி புரிந்து பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட இலங்கையர்கள் 52 பேர் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். 

நேற்றுக்காலை 6.35 மணியளவில் கட்டுநாயக்கவை வந்தடைந்த இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யு.எல். 230ஆம் இலக்க விமானத்தில் இவர்கள் நாடு திரும்பினர். 

இவர்களில் ஆறு பேர் குவைத் நாட்டில் இரு வருடங்களுக்கு மேல் பணி புரிந்துள்ளனர். ஏனையோர் ஒரு வருடத்திற்கு குறைவான காலமே அங்கு பணிபுரிந்துள்ளனர். இவர்கள் வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்கள்.

குவைத் நாட்டில் இவர்கள் பணி புரிந்த காலத்தில் சம்பளம் கிடைக்காது பல்வேறு விதத்திலும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்ந்ததால் தாம் பணி புரிந்த வீடுகளிலிருந்து தப்பி வெளியேறி குவைத் நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்தவர்களாவர். 

இவர்களில் எட்டு பேரைத் தவிர ஏனைய 44 பேரும் குவைத் அரசாங்கம் வழங்கிய தற்காலிக விமான கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு இலங்கை வந்துள்ளனர்.

No comments:

Post a Comment