இந்திய மீனவர்கள் ஏழு பேர் திருமலை கடற்பரப்பில் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, February 9, 2019

இந்திய மீனவர்கள் ஏழு பேர் திருமலை கடற்பரப்பில் கைது

இந்தியா மீனவர்கள் ஏழு பேர் இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு (09) கைது செய்யப்பட்டுள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திருகோணமலை, புல்மோட்டை, கொக்குதுடுவாய் பகுதிக்கு கிழக்கு பகுதியில் உள்ள கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

ஏழு மீனவர்களுடன் படகு (Dhow) ஒன்றினையும் கைப்பற்றியுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்தியா, டாடாநகர் நாகபட்டினம் பகுதியைச் சேர்ந்த 15, 21, 25, 30, மற்றும் 41வயதுடையவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்துல்சலாம் யாசீம்

No comments:

Post a Comment