42 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, February 28, 2019

42 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து நேற்று (28) அதிகாலை மன்னார் - தலை மன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் பகுதியில் மேற்கொண்ட விசேட கண்கானிப்பு நடவடிக்கையில் போது 42 கிலோ 50 கிராம் கேரள கஞ்சாப் பொதிகளுயுடன் ஒருவரை கைது செய்துள்ளனர். 

கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சா சுமார் 42 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வருகின்றது. 

வடக்கு கடற்படை கட்டளை தலைமையக அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் இணைந்து மேற்கொண்ட குறித்த நடவடிக்கையின் போதே குறித்த கேரள கஞ்சாப்பொதி மீட்கப்பட்டுள்ளது. 

மன்னார், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரனைகளை மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

மன்னார் நிருபர் லெம்பட்

No comments:

Post a Comment