ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பான சுயேட்சை குழுவில் நான் போடியிட்டேன் நான் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச அமைப்பார் இப் பிரதேசத்தை சேர்ந்த இராஜாங்க அமைச்சர் அமீர் அலிக்கும் எனக்கும் பிரதேச சபை தேர்தலில் வேட்பாளர்களை நியமிப்பதில் ஏற்பட்ட கருத்து மோதலினால்தான் நான் சுயேட்சையாக போட்டியிட்டேன் நான் முஸ்லீம் காங்கிரஸ் அங்கத்தவர் அல்ல நான் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளரும் அக்கட்சின் பிரதேச அமைப்பாளருமாகும் என கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் எம்.எம்.ஹனீபா தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச சபையில் கடந்த வருடத்திற்கான இறுதி அமர்வு 27.12.2018 அன்று இடம் பெற்ற போது சபையின் உறுப்பினராகிய நான் சபை அமர்வுகளில் கலந்து கொள்ளாமல் எனது சம்பளம் தவிசாளரினால் எடுக்கப்பட்டுள்ளது என்று சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பான சுயேட்சை குழு உறுப்பினர்கலால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு எதிராகவும் அக் குற்றச்சாட்டு உண்மைக்கு புரம்பானது என்றும் ஊடகவியலாளர் மாநாட்டில் இன்று சபையின் உறுப்பினர் எம்.எம்.ஹனீபா தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் இன்று (02.01.2019) புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலயே பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.ஹனீபா மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், பிரதேச சபையின் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினை தோட்கடிக்குமாறு முஸ்லீம் காங்கிரஸ் சார்பான சுயேட்சை குழு உறுப்பினர்கள் என்னிடம் வந்து கருத்து தெரிவித்தார்கள் ஓட்டமாவடி பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சபையாக இருப்பதால் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டு கட்சியாக இருப்பதனால் அதனை என்னால் செய்யமுடியாது என்று தெரிவித்த காரணத்திற்காகவே என் மீது அபாண்டமான குற்றச்சாட்டினை தெரிவிக்கின்றனர்.
நான் சபை அமர்வு ஒன்பதில் ஏழு அமர்வுக்கு வருகை தந்துள்ளேன் சில அமர்வுகள் முடிவடைவதற்கு முதல் வரவு புத்தகத்தில் ஒப்பமிட்டுவிட்டு தவிசாளரிடமும் செயலாளரிடமும் எனது தேவையின் நிமித்தம் வெளியே சென்று இருக்கிறேன் எனது கொடுப்பணவை தவிசாளர் பெற்றிருந்தால் நான்தான் அவர் மீது குற்றம் சொல்ல வேண்டும் கொடுப்பணவை நானே பெற்றுக் கொண்டுள்ளேன் என்று சொல்லும் போது அவர்கள் எவ்வாரு தவிசாளர் போலி ஒப்பமிட்டு சம்பளத்தை பெற்றார் என்று கூற முடியும்.
முஸ்லீம் காங்கிரஸ் சார்பான சுயேட்சை குழு உறுப்பினர் அஸீசுல் றஹீம் என்ற உறுப்பினர் தாக்கப்பட்டதற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனது ஆதரவாளர்கள் தாக்கினர்கள் என்ற குற்ற சாட்டை நான் முற்று முழுதாக எதிர்க்கிறேன் அக்குற்றச்சாட்டு உண்மைக்குப்பபுறம்பானது என்றும் தெரிவித்தார்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment