வாழைச்சேனை ஆயிஷா மாணவிகள் நீதிமன்றத்திற்கு விஜயம் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 31, 2019

வாழைச்சேனை ஆயிஷா மாணவிகள் நீதிமன்றத்திற்கு விஜயம்

நீதிமன்றத்தின் செயற்பாடுகளை அவதானிப்பதற்காக வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் நேற்றுமுன்தினம் (30) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் குடியியல் பாடத்தினை கற்றுக் கொள்ளும் மாணவிகளே நீதி மன்ற செயற்பாடுகளை பார்வையிட சென்றிருந்தனர்.

குறித்த குடியியல் பாடத் திட்டத்தில் வரும் ஒரு அங்கமான நீதிமன்ற செயற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு அதனை தெரிந்து கொள்ளும் வண்ணம் இவ் விஜயம் இடம்பெற்றது.

இவ் விஜயத்தின் போது மாணவிகள் நீதிமன்ற செயற்பாடுகளை அறிந்து கொண்டதோடு வழக்கு விசாரணைகள் இடம்பெறும் முறைகள் பற்றியும் தெரிந்து கொண்டனர்.

குறித்த பாடசாலை மாணவிகளோடு சட்டத்தரணி எம்.எம்.எம்.றாசிக், ஆசிரியர்களான எம்.ஐ.எம்.சபீக், எம்.எம்.எம்.அஸ்மின், ஜே.சாஜிதா ஆகியோர்களை படத்தில் காணலாம்.

எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment