கல்குடா ஜனாஸா நலன் சேவை அமைப்பின் காரியாலயத்திறப்பு விழா - அனைவருக்குமான திறந்த அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, January 31, 2019

கல்குடா ஜனாஸா நலன் சேவை அமைப்பின் காரியாலயத்திறப்பு விழா - அனைவருக்குமான திறந்த அழைப்பு

கல்குடா ஜனாஸா நலன் சேவை அமைப்பின் காரியாலயத் திறப்பு  விழா இன்று 01.02.2019ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 முதல் 5.00 மணி வரை ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆப்பள்ளிவாயல் வளாகத்தில் இடபெறவுள்ளது.

கல்குடா ஜனாஸா நலன் சேவை அமைப்பின் தலைவர் A.L.M.முஸ்தபா (சிறாஜி) தலைமையில் இடம்பெறும் இத்திறப்பு விழாவில் கல்குடா ஜனாஸா நலன் சேவை அமைப்பின் தேவைப்பாடு, நோக்கம், செயற்பாடுகள் பற்றிய தெளிவுகள் வழங்கப்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் எம்மால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைள் தொடர்பிலும் நாம் உம்மோடு கலந்துரையாடவுள்ளோம்.

கால, நேரத்தின் அருமை கருதி மிகச்சுருக்கமான நிகழ்வாக எம்மால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வுக்கு திறந்த அழைப்பே விடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, எமது பிரதேசத்தின் முக்கிய தேவையாகக் காணப்படும் இது விடயத்தில் அக்கறையுள்ள அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு.

இக்குறுகிய கால அழைப்பினை தாங்கள் ஒவ்வொருவருக்கும் விடுக்கப்பட்ட தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொண்டு கலந்து கொண்டு தங்களின் மேலான ஆலோசனைகள், ஒத்துழைப்புக்களை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

இது தனிப்பட்ட நம் ஒவ்வொருவருக்குமான தேவையும் இப்பிரதேச மக்கள் அனைவருக்குமான சேவை என்பதை மனதிற்கொள்வோம். எனவே, நேரத்தின் அருமை கருதி உரிய நேரத்திற்கு வந்து கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

கல்குடா ஜனாஸா நலன் சேவை அமைப்பு
கல்குடா

No comments:

Post a Comment