ரூபா 6 கோடிக்கும் அதிக ஹெரோயினுடன் 53 வயது நபர் கைது - 5 கிலோவுக்கும் அதிக ஹெரோயின் முச்சக்கர வண்டியில் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, January 17, 2019

ரூபா 6 கோடிக்கும் அதிக ஹெரோயினுடன் 53 வயது நபர் கைது - 5 கிலோவுக்கும் அதிக ஹெரோயின் முச்சக்கர வண்டியில் மீட்பு

ரூபா 6 கோடிக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (16) இரவு 8.50 மணியளவில் மாலபே, கடுவல வீதியில் கொத்தலாவல சந்திக்கு அருகில் முச்சக்கர வண்டி ஒன்றில் 5.024 கிலோகிராம் போதைப்பொருளை எடுத்துச் சென்ற சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்டபோதை பொருளின் மதிப்பு ரூபா 6 கோடிக்கும் அதிகம் (ரூ. 60,288,000) என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இராஜகிரிய மற்றும் கடுவல ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 53 வயதான குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் (17) கடுவல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவைப் பெற உள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார். பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment