மட்டக்களப்பு – வவுணதீவு வவுணதீவு பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களினதும் தலைகளில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தரின் தலையில் இரண்டு தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
சிங்கள உத்தியோகஸ்தரின் தலையில் ஒரு தடவை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வெட்டுக் காயங்களும் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று (30) மாலை நிறைவடைந்த பிரேதப் பரிசோதனையினூடாக இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் நேற்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காலி உடுகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மற்றும் கல்முனை, பெரியநிலாவௌி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பொலிஸ் காண்ஸ்டபிள் இருவரே கொலை செய்யப்பட்டிருந்ததுடன், இருவரும் நேற்று பொலவிஸ் சார்ஜண்ட ஆக பதவி உயர்த்தப்பட்டனர்.
No comments:
Post a Comment