இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமின் நிதியில் இருந்து தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, December 31, 2018

இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமின் நிதியில் இருந்து தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பொத்துவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நேற்று தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அறுகம்பே சமூக அபிவிருத்தி அமைப்பின் ஊடாக இராஜாங்க அமைச்சர் இவற்றை நேற்று அக்குடும்பங்களுக்கு வழங்கி வைத்தார்.பொத்துவில் பிரதேச செயலகத்தில் பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.நசீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அறுகம்பே சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவரும் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினரும் இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமின் பொத்துவில் பிரதேச இணைப்பாளருமான எம்.எச்.ஏ.ரஹீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஊடகப் பிரிவு

No comments:

Post a Comment