இம்முறை டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை டுபாயில் இடம்பெற்ற 13 ஆவது "ஸ்க்ரேபல்" (Scrabble) இளைஞர் உலக வெற்றிக்கிண்ணத்தின் வெற்றியை சுவீகரித்துக் கொண்ட, இலங்கை வீர வீராங்கனைகள், இன்று (31) திங்கட்கிழமை காலை விளையாட்டுத்துறை அமைச்சில் வைத்து, புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவைச் சந்தித்தனர்.
இங்கு வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளுக்கு அமைச்சர் தனது வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்தார். இந்த விளையாட்டை, இன்னும் மேம்படுத்துவதற்கும், விளையாட்டுத்துறை அமைச்சினால் மேற்கொள்ள வேண்டிய அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேலும் முன்னெடுப்பதாகவும், அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment