ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தற்போதைய இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இதன்போது பேசிக்கொண்ட விடயங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தற்போதைய அரசியல் சர்சையில் இவர்கள் இருவரும் சந்திப்பில் ஈடுபட்டுள்ளமையானது புதியதொரு திருப்பத்தை ஏற்படுத்துமென அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment