நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை - நிதியுதவியை நிறுத்தியது சர்வதேச நாணய நிதியம் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 18, 2018

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை - நிதியுதவியை நிறுத்தியது சர்வதேச நாணய நிதியம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து மேலதிக தெளிவு ஏற்படும் வரை இலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான பேச்சாளர் ஹெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் சுற்றுலா வளர்ச்சி திட்டத்திற்காக இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு இணங்கியிருந்தது. இதற்காக 2018 ஆம் ஆண்டு ஜூலை 03 ஆம் திகதி அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியிருந்தது.

குறிப்பாக முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் கீழ் சர்வதேச நாணய நிதியம் இந்த நிதியுதவியை வழங்கியிருந்தது.

இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை காரணமாக அவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment