லசந்த விக்கிரமதுங்க, வாசிம் தாஜூடீன் கொலைகள் உள்ளிட்ட முக்கிய விசாரணைகளை மேற்கொண்ட சிஐடி நிசாந்த சில்வா உடனடி இடமாற்றம்! - News View

About Us

About Us

Breaking

Sunday, November 18, 2018

லசந்த விக்கிரமதுங்க, வாசிம் தாஜூடீன் கொலைகள் உள்ளிட்ட முக்கிய விசாரணைகளை மேற்கொண்ட சிஐடி நிசாந்த சில்வா உடனடி இடமாற்றம்!

ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவை இடமாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சேவை நோக்கத்திற்காக நேற்று (18) முதல் அவரை நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்கு இடமாற்றம் செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். 

இவர் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டமை, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, ரக்பி வீரர் வாஷீம் தாஜூடீன் படுகொலை, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் மிகத்திறமையாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை, முப்படைகளின் பிரதானி ரவீந்திர குணவர்த்தன மற்றும் நேவி சம்பத்திற்கு எதிரான முக்கிய ஆதாரங்களை திரட்டுவதிலும் நிசாந்த சில்வா முக்கிய பங்களிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment