மாலியின் கடற்பகுதி கூட்டுப்பயிற்சியில் இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் 'சுரக்ஸா' - News View

About Us

About Us

Breaking

Thursday, November 29, 2018

மாலியின் கடற்பகுதி கூட்டுப்பயிற்சியில் இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் 'சுரக்ஸா'

மாலைதீவு நாட்டின் தலைநகரான மாலியின் கடற்பகுதியில் நடைபெறும் 'டொஸ்டி – XIV' எனும் முத்தரப்பு கடலோர பாதுகாப்பு கூட்டுப்பயிற்சியில் இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் 'சுரக்ஸா' ஆழ்கடல் ரோந்து படகு கலந்துகொண்டுள்ளது. 

கடந்த 26ஆம் திகதி ஆரம்பமான 'டொஸ்டி - XIV' எனும் இந்த கூட்டுப்பயிற்சி நாளை வரை (30 )நடைபெறவுள்ளது. 

இலங்கை கடலோர பாதுகாப்பு படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட குறித்த படகு தனது வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும்.

இந்த ஆழ்கடல் ரோந்து படகு 'சுரக்ஸா' எனும் பெயரிடப்பட்டு கடந்த வருடம் (2017) ஆணையதிகாரம் அளிக்கப்பட்ட இலங்கை கடலோர பாதுகாப்பு படையில் இணைத்துக்கொள்ளப்பட்டு முதலாவது ஆழ்கடல் ரோந்து கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து நாட்கள் நடைபெறும் இம்முத்தரப்பு கடலோர பாதுகாப்பு கூட்டுப்பயிற்சியில் இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையேயான நட்புறவை வலுப்படுத்தல், மற்றும் பிராந்தியங்களுகிடையே கூட்டுறவுடனான புரிந்துணர்வு நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ,மற்றும் கடல் மாசுருவதை காத்தல், கடல் எல்லையில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடல் இதன் நோக்மாகும்.

'சுரக்ஸா' எனும் ஆழ்கடல் ரோந்து படகு முத்தரப்பு கடலோர பாதுகாப்பு கூட்டுப்பயிற்சியில் கலந்து கொள்வதற்காக மாலைதீவிற்கு கடந்த 23ஆம் திகதி நாட்டை விட்டு புறப்பட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment