பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை கல்லூரியின் 26 மாணவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளடங்கலான குழுவினர் தமது கற்கை நெறி தொடர்பான விடயங்களை மேற்கொள்ள இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதன்போது இராணுவ தலைமையக அலுவலகத்தில் இராணுவ தளபதி லெப்டனென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவை நேற்று முன்தினம் சந்தித்தனர்.
இலங்கைக்கு பத்து நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இவர்கள் விமானப்படை தளபதி மற்றும் கடற்படை தளபதி, சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய ஆய்வுகள் லக்ஷ்மன் கதிர்காமர் இன்ஸ்டிடியூட், பாதுகாப்பு பல்கலைக்கழகம், பங்களாதேஷ் உயர் ஆணையம் மற்றும் பல நிறுவனங்கள் போன்றவற்றையும், வரலாற்று கலாச்சார போன்ற இடங்களையும் பார்வையிட்டனர்.
இந்த சந்திப்பின் இறுதியில் இராணுவத்தின் தளபதி மற்றும் பங்களாதேஷ் பிரதிநிதிகளின் அதிகாரிகள் நல்லிணக்கம் தொடர்பாக கலந்துரையாடினர். மேலும் இலங்கை இராணுவம் மற்றும் அதன் பங்களிப்பு பற்றி ஒரு தனித்துவமான கருத்துக்களையும் இராணுவ பயிற்ச்சியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அருணா வன்னியாராச்சி இதன்போது கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர், பிரதி பாதுகாப்பு செயலாளர் இராணுவ கடற்படை மற்றும் விமானப் படைத் தளபதிகள் பங்களாதேஷ் கடற்படையின் கெப்டன் அப்துல்லா அல் மக்ஷஸ், பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு சேவைகள் கட்டளை கல்லூரி அதிகாரிகள், இலங்கை உயர் ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலகம், இராணுவ பயிற்சியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அருணா வன்னியாராச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment