நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடியது – இன்றும் ஆளுங்கட்சி புறக்கணிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, November 29, 2018

நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடியது – இன்றும் ஆளுங்கட்சி புறக்கணிப்பு

நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் 10.30 மணிக்கு மீண்டும் கூடியது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட உள்ளது.

ஐக்கிய தேசிய முன்னியினரால் குறித்த பிரேரணை கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய நாடாளுமன்ற அமர்விலும் ஆளுங்கட்சி கலந்துக்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவநானயகார தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை 123 பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வை ஆளும் கட்சியினர் புறப்பணித்திருந்த நிலையில் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் விஷேட உரை ஒன்றை நிகழ்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment