அமைச்சுகளின் செலவுகளை தடுக்கும் பிரேரணை பெரும்பான்மையுடன் நிறைவேற்றம் - பாராளுமன்றம் டிசம்பர் 5 வரை ஒத்திவைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, November 30, 2018

அமைச்சுகளின் செலவுகளை தடுக்கும் பிரேரணை பெரும்பான்மையுடன் நிறைவேற்றம் - பாராளுமன்றம் டிசம்பர் 5 வரை ஒத்திவைப்பு

அமைச்சர்களின் செலவுகளை நிறுத்தும் வகையில் அமைச்சு செயலாளர்கள் அரசாங்க நிதியை பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் 122 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று (30) முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் சபை அமர்வு ஆரம்பமானது. 

இதனையடுத்து, குறித்த பிரேரணை சபையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்றம் எதிர்வரும் டிசம்பர் 05 திகதி முற்பகல் 10.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் (29) பிரதமரின் அலுவலக செலவுகளை நிறுத்தும் பிரேரணை 123 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பாராளுமன்ற சபை நடவடிக்கையில் ஆளும் தரப்பு இன்றும் (30) கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சபாநாயகரின் நடவடிக்கை தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கடந்த செவ்வாய்க்கிழமை (27) முதல் பாராளுமன்ற அமர்வுகளை ஆளும் தரப்பு எம்.பிக்கள் பகிஷ்கரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment