யாழிலிருந்து பயணித்த சொகுசு பேருந்து கவிழ்ந்து பாரிய விபத்து - 3 பேர் உயிரிழப்பு, 19 பேர் காயம்! - News View

About Us

About Us

Breaking

Thursday, November 29, 2018

யாழிலிருந்து பயணித்த சொகுசு பேருந்து கவிழ்ந்து பாரிய விபத்து - 3 பேர் உயிரிழப்பு, 19 பேர் காயம்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ்ஸொன்று விபத்துக்குளானதில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்து சிலாபம், மாரவில தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பஸ் இன்று சிலாபம் மாதம்பையை அண்மித்த போது பிரதான பாதையில் பயணிக்காது மாதம்பை ஹொரவங்குவ ஊடாக நாத்தாண்டி, தங்கொட்டுவ வழியாக கொச்சிக்கடைக்கு வரும் நோக்கில் பயணித்துள்ளது.
எனினும் நாத்தாண்டிய பகுதியை பஸ் அண்மித்த போது வீதியை விட்டு விலகி ஹெமில்டன் கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரி (வயது 60) என்ற பெண் உயிரிழந்துள்ளார். ஏனையவர்கள் யார் என்பது பற்றிய விபரங்களை அறிய முடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் காயமடைந்த 19 பேரில் 03 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஏனையோர் சிறு சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பில் யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment