சிரியாவில் ராட்சத மனித புதை குழியில் 1,500 அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டு பிடிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, November 1, 2018

சிரியாவில் ராட்சத மனித புதை குழியில் 1,500 அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டு பிடிப்பு

சிரியாவில் ராட்சத மனித புதை குழியில் 1,500 அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 

சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகின்றது.

இந்த உள்நாட்டுப்போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். அமைப்பினர் கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். அவர்களின் தலைநகராக ராக்கா நகரம் விளங்கியது.

அந்த நகரத்தை ஐ.எஸ். அமைப்பிடமிருந்து மீட்பதற்கு கடும்போர் நடைபெற்றுவந்தது. இந்தப் போரில் ஜனாதிபதி ஆதரவு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல் நடத்தின. 
அவ்வாறு நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இது சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு வழிவகுத்தது.

இந்த நிலையில் அந்த நகரத்தில் ராட்சத மனித புதை குழி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதில் 1,500 அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இவர்கள் அனைவரும் அமெரிக்க கூட்டுப்படையின் வான்தாக்குதலில் பலியானவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. இதுவரை அங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வான்தாக்குதல்கள் காரணமாக ராக்கா நகரின் 85 சதவீத பகுதி அழிக்கப்பட்டு விட்டதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.

No comments:

Post a Comment