முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 2, 2018

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குறித்த வழக்கு இன்று (02) விசாரணைக்கு வந்த போது, அவரை எதிர்வரும் 16ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார். 

2012ம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment